பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது ஏன்?
ADDED :1825 days ago
குற்றம் செய்தவன் பொய் சொல்லி தண்டனையில் இருந்து தப்பலாம். ஆனால் அந்த பாவம் அவனை விடாது. ஆனால் பொய் சாட்சி மூலம் குற்றம் செய்தவர் எனக் கருதப்பட்டு தண்டனைக்கு ஆளானவர் பழி சுமக்க நேரிடும். என்றாவது உண்மை வெளிப்படும். இதையே பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்கிறார்கள்.