நரசிம்மருக்கு சுவாதி திருமஞ்சனம்
                              ADDED :1705 days ago 
                            
                          
                            நரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று, சுவாதி திருமஞ்சனம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.இங்கு, மூலவர் நரசிம்மர், தாயாரை மடி மீது அமர்த்தி, அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.இங்கு, மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று, மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று, சுவாதி என்பதால், பக்தர்கள், சமூக விலகல் கடைபிடித்து, நெய் தீபம் ஏற்றி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையும், காலை, 9:00 மணிக்கு, திருமஞ்சனமும், காலை, 10:00 மணிக்கு, யாக பூஜையும் நடந்தது.