உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் பெருமாள் தாயார் உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி, இன்று சிறப்பு ஹோமம் நடந்தது. சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தியை  முன்னிட்டு இன்று காலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் துவங்கியது. இதில் நரசிம்மர், சுதர்சன, தன்வந்திரி, பஞ்சசுத்த, கருட மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வசுத்தரா ஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் மற்றும் பூவரசன்குப்பம் கிராம வாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !