வேகமான பயணத்துக்கு...
ADDED :1816 days ago
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வது போல, பிறவிப்பயணத்தை விரைவில் முடிக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழி காட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோர் பிறவித்துன்பத்தை விரைவில் களையலாம். அத்துடன், ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய சிவாயநம என்பவற்றையும் தினமும் சொல்ல வேண்டும். அவ்வையார், தனது நீதிநூலான நல்வழியில், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.