உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

 சென்னை : திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாசி மாத ஏழு நாள் தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது.

முதல் நாளில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன், பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், நேற்று மாலை, 6:30 மணிக்கு துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன், பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் ஐந்து முறை வலம் வந்து அருள்பாலித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாள் அருளை பெற்றனர். நாளை முதல் இரண்டு நாட்கள் உற்சவர் பார்த்தசாரதி தெப்பம் நடக்கிறது.அடுத்த நான்கு நாட்களில் முறையே நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரவரதராஜ சுவாமி ஆகியோர், தெப்பத்தில் மாலை 6:30 மணிக்கு வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !