கன்னடம்பட்டியில் கும்பாபிஷேகம்
ADDED :4871 days ago
ரெட்டியார்சத்திரம்: கே.புதுக்கோட்டை அருகே கன்னடம்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கணபதி யாகம், வாஸ்து சாந்தியுடன், வேள்விகள் நடந்தன. கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.கோவை கல்விப்புரவலர் ஆறுமுகசாமி, மாவ ட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜ்மோகன், காமாட்சிபுரம் ஊராட்சி செயலாளர் கணேஷ்பிரபு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பசும்பொன், ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, நடராஜன், ராமசாமி பங்கேற்றனர்.