அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை விழா
ADDED :1778 days ago
புதுச்சேரி - அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் 44ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை மயானக் கொள்ளை நரிமேடு மைதானத்தில் நடந்தது. ஆயிரக்கணகக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக மதியம் 1.00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. வரும் 26ம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், வீதியுலா நடக்கிறது. 27ம் தேதி தெப்ப உற்சவம், 28ம் தேதி மகா அபிேஷகம், 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 30ம் தேதி சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 31ம் தேதியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.