உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் துவக்கம்

அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் துவக்கம்

 ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன், 28ல் துவங்குகிறது.

ஜம்மு -- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை, பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடக்கும் என, கோவில் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு, ஏப்., 1-ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - -காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளில், இந்த முன்பதிவை செய்து கொள்ளலாம். இந்த யாத்திரையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 13 வயதுக்குட்பட்டவர்களும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணியரும், யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !