மயிலம் பகுதி கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :1645 days ago
மயிலம் : மயிலம் பகுதி கோவில்களில் நேற்று மாத சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.
மயிலம் அடுத்தஆல கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.இதேபோன்று மயிலம் சுந்தர விநாயகர் கோவில், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், ஆலகிராமங்களில் உளு்ள சிவன் கோவில்களில் நடந்த சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.