உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு

புத்தேரி மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு

 பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; பகல் 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !