உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் புத்தாண்டு வழிபாடு

சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் புத்தாண்டு வழிபாடு

மதுரை : மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும்,  கோமதி அம்பிகை சமேத  சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில்,  ஸ்ரீ பிலவ தமிழ் புத்தாண்டு சித்திரை மாத  முதல் நாள்  சிறப்பு பூஜை  மற்றும்  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிகளுக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி  சர்வ  அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி  அளித்தனர். இன்றைய பூஜை உபயதாரர்கள்  சென்னகரம்பட்டி  சுந்தரராஜன், தமிழ்செல்வி ,  குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்களுக்கு  சர்க்கரை பொங்கல், மா, பலா, வாழை பழம்,  பிரசாதம் வழங்கப்பட்டது.  ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !