சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமி விழா
ADDED :1672 days ago
திருக்கோஷ்டியூர்: சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 10.00 மணிக்கு ஆண்டாள் சன்னதி அருகில் உள்ள ராமர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குள்ள ராமர், சீதை, லெட்சுமணன், அனுமன் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலையில் வழக்கமாக நடைபெறும் திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை.