நாத்திகரோடு உறவாடாதே
எச்சரிக்கிறார் ஷீரடி சாய்பாபா
* நாத்திகர்கள், கொடுமையாளர்களுடன் நட்போ, உறவோ கூடாது.
* கடலில் சங்கமிக்கும் ஆறுகள் போல பக்தர்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவர்.
* எங்கிருந்தாலும் கடவுளின் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது.
* நல்ல குருநாதரை சரணடைந்தால் நம் வாழ்வு கடைத்தேறும்.
* உண்மையான பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை என்பதே இருக்காது.
* அறிவை மறைக்கும் அறியாமை என்னும் திரையை கிழித்தெறியுங்கள்.
* அகந்தையை அகற்றினால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* கடவுளுக்கென தனிப் பெயரோ, வடிவமோ கிடையாது.
* குருநாதரின் கருணை என்னும் மருந்து அறியாமையைப் போக்கும்.
* கடவுள் நம்பிக்கையை விட குருபக்தியே மேலானது.
* கடவுளை முழுமையாக சரணடைந்தால் ஆசை நெருங்காது.
* எது வேண்டுமானாலும் கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.
* உலக விஷயங்களில் ஈடுபட்டு பெருமைப்படுவது போலி கவுரவம்.
* கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான கவுரவம்.
* பசித்திருப்போருக்கு இரக்கமுடன் உணவளியுங்கள்.
* எல்லா உயிர்களையும் கடவுளின் அம்சமாகக் காணுங்கள்.
* போட்டி, பொறாமை, விவாதத்தைக் கைவிட்டு விவேகமுடன் செயல்படுங்கள்.
* அலை பாயும் எண்ணம் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது.
* உலகப் பொருட்களின் மீதான கவர்ச்சியை புறக்கணியுங்கள்.