உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் தொலைய கடவுளைச் சரணடைவோம்!

பாவம் தொலைய கடவுளைச் சரணடைவோம்!

வழிகாட்டுகிறார் ராமானுஜர்

* கடவுளைச் சரணடைந்தால் நம் பாவங்கள் தொலையும்.  
* கடவுளுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது புனிதமடையும்.   
* மற்றவர்களை அவமதிப்பது மிகக் கொடிய செயல்.
* பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதுவும் ஏற்கத்தக்கது அல்ல.  
* ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை தினமும் பாடுங்கள்.  
* ஐம்புலன்களே நம் முதல் விரோதிகள் என்பதை மறவாதீர்கள்.
* கடவுளுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை, பாக்கை ஏற்கக் கூடாது.
* எந்த பொருளாக இருந்தாலும் அதை மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பியுங்கள்.
* ஒரு கடவுளை மட்டும் வழிபடுங்கள். பல தெய்வங்களை வழிபட்டால் அது அவரை அவமதிப்பதாகும்.  
* நல்லவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனை கொண்டவர்களை கண்டால் வணங்குங்கள்.  
* வாழ்வில் குறுக்கிடும் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக கருதுங்கள்.   
* தொண்டு செய்வதன் மூலமே கடவுளை நம்மால் அடைய முடியும்.  
* ஸ்ரீமந் நாராயணரே ‘பரம்பொருள்’ என்ற தெளிவுடன் பக்தி செலுத்துங்கள்.
* கோயில் கோபுரத்தைக் கண்டதும் நின்ற இடத்தில் இருந்தே கைகூப்புங்கள்.
* சுவாமி சிலைகளை கல், ஐம்பொன், சுதை, மரம் எனக் கருதாதீர். அது தாயின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போன்றது.
* குருநாதர், அடியவர்களைக் கண்டதும் வணங்குவது உயர்வுக்கு வழிவகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !