புவனேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :1624 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு புவனேஸ்வரர், புவனேஸ்வரி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.விக்கிரவாண்டி ஏரிக்கரையிலுள்ள துர்க்கையம்மனுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீப ஆராதனை நடந்தது. சிந்தாமணி நல்லுார் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தையல்நாயகி, வைத்தீஸ்வரன், நந்தி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் நறுமன பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் தையல்நாயகி அம்மன் பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீப ஆராதனை நடந்தது.