சிவபுரிபட்டியில் வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1658 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு ஆறு அடி உயர வடுக வைபரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் நடந்தது.