உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதியாக வாழும் மூவர்

நிம்மதியாக வாழும் மூவர்


தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நாயகம் குறிப்பிடுகிறார்.
* பிறருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.
* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க மாட்டார். ஆனால்  யோசிக்காமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க வரவுக்கேற்ப செலவு செய்வது மிக அவசியம்.
* நடுநிலையுடன் இருப்பவர் வறுமையின் பிடியில் சிக்க மாட்டார். இரு குடும்பத்திற்கு இடையே அல்லது தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில் அவர் எதிர்தரப்பினரின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !