பாடலீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1659 days ago
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் தெருவடைச்சான் உற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்தி உற்சவர் அபிஷேகம் நடைபெற்றது.
திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு ஐந்தாம் நாள் தெருவடைச்சான் உற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்தி உற்சவர் அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.