சோமவார விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது
ADDED :1845 days ago
கார்த்திகை சோமவாரத்தன்று காலையில் கோயிலில் சுவாமிக்கு வில்வம் சாற்றி வழிபட வேண்டும். அன்று மாலை வழிபாட்டிற்கு பின், இரவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இயலாதவர்கள் மதியம் சாப்பிட்டு, மாலையில் கோயில் வழிபாட்டை முடித்து பால், பழம் மட்டும் சாப்பிடவும். அன்று சிவ நாமம், தோத்திரங்கள், திருமுறைகள் பாராயணம் செய்வது அவசியம்.