உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா

தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா

மதுரை : மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரம்  கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலின் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு இன்று  (14ம் தேதி) நடைபெற்றது.நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், நவகிராக ஹோமம், ருத்ர ஹோமம்,  அஷ்ட லட்சுமி ஹோம பூஜையுடன் சுவாமிகளுக்கு,   எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமிகள் சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தனர். இன்றைய பூஜை உபயதாரர்கள் மதுரையை சேர்ந்த திரு. விமல், மேலூரை சேர்ந்த திரு.ஜெயராணி, ஜீவா ஆயில், சாய் டெக்ஸ், அங்கப்பன், பாண்டி, மற்றும் சுந்தரராஜன் - தமிழ்செல்வி, சங்கரன்கோயில் செல்வராஜ் - செல்வி குடும்பத்தினர்  ஏற்பாடு செய்திருந்தனர். ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !