உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

மதுரை: மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரம்  கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் நேற்று (22ம் தேதி) சிறப்பு அலங்கார, அர்ச்சனை,   வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிக்கும்,  நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார். இன்றைய பூஜை உபயதாரர்கள் மதுரையை சேர்ந்த டாக்டர்.மோகன் - ஷர்மிளா, சங்கரன்கோவில் திரு.செல்வராஜ் - செல்வி குடும்பத்தினர். ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !