ஏகாதசி அவதாரங்கள்!
ADDED :1677 days ago
மற்ற விரதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஏகாதசிக்கு உண்டு. அசுரன் ஒருவனைக் கொல்வதற்காக பெருமாளின் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றினாள். அவளை ஏகாதசிஎன்று அழைத்தனர். அவளுக்காகவே இறைவன் இந்த விரதத்தை ஏற்படுத்தியதாக பத்மபுராணம் குறிப்பிடுகிறது. விஷ்ணு, கூர்ம அவதாரமாக ஆமை வடிவிலும், அமிர்த கலசம் ஏந்தி நோய் தீர்க்கும் தன்வந்திரியாகவும், தேவர்களுக்கு அமிர்தம் வழங்கும் மோகினியாகவும் அவதாரம் எடுத்ததும் ஏகாதசி நன்னாளிலேயே ஆகும்.