மடப்புரம் கோயில் திறக்க கோரிக்கை
ADDED :1570 days ago
திருப்புவனம் : பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலை பக்தர்கள்தரிசனத்திற்கு திறக்க வலியுறுத்தியுள்ளனர். மடப்புரம் காளி கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள். ஆடி மாதத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இக்கோயிலை திறக்க அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.