உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை வழிபாடு

சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை வழிபாடு

மதுரை : தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது.

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நந்திதேவருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும்  அமாவாசையை முன்னிட்டு,  சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது.  நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  சுவாமி சர்வ  அலங்காரத்தில்  அருள்பாலித்தார்.  கோயில் நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !