உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரெங்கன் அலங்காரத்தில் சவுந்தரராஜப் பெருமாள் வலம்

பாண்டுரெங்கன் அலங்காரத்தில் சவுந்தரராஜப் பெருமாள் வலம்

வடமதுரை: வடமதுரை ஆடித்திருவிழாவில் பாண்டுரெங்கன் அலங்காரத்தில் சவுந்தரராஜப் பெருமாள் உலா வந்தார்.

இங்கு ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 13 நாட்கள் திருவிழா நடக்கும். கொரோனா பிரச்னையால் கடந்த ஆண்டை போல இந்தாண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்ற நிகழ்வுகள் வழக்கம்போல கோவில் வளாகத்துக்குள் எளிமையான முறையில் நடக்கிறது. திருவிழா உற்ஸவ நேரம் தவிர மற்ற நேரங்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விழாவில் பாண்டுரெங்கன் அலங்காரத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்திற்குள் வலம் வந்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !