சந்தியாவந்தனம் என்றால் என்ன?
ADDED :1533 days ago
இரண்டு பொழுதுகள் சந்திக்கும் நேரம் சந்தி. இரவும் பகலும் சந்திப்பது காலை சந்தி. முற்பகலும், பிற்பகலும் சந்திப்பது மத்யானம் என்னும் உச்சி சந்தி. பகலும் இரவும் சந்திப்பது மாலை சந்தி. இந்த மூன்றையும் ‘சந்தியா’ எனக் குறிப்பிடுவர். அந்நேரத்தில் கடவுளுக்கு வந்தனம் சொல்வது (வணங்குவது) அவசியம். இதுவே சந்தியா வந்தனமாகும்.