உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கயிறு கட்டினால் கல்யாணம்

கயிறு கட்டினால் கல்யாணம்


தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படும். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். மக்கள் கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ்வரரை வழிபடுவர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதிக்கு பூஜை செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் கயிற்றினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் காப்பாக கட்டிக் கொள்வர். இதனால் குடும்பத்தில் திருமணம் போனற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !