உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி, பிரதோஷ பூஜை

சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி, பிரதோஷ பூஜை

மதுரை: மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரம்  கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில், நேற்று (6ம் தேதி) ஆடி மூன்றாம் வெள்ளி, சிவாரத்திரி,  தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார, அர்ச்சனை,  வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிக்கும்,  நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி  ஸ்வர்ணபுரிஸ்வரர் அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். இன்றைய பூஜை உபயதாரர்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர். அமுதநிலவன் - டாக்டர். பாலகுருசாமி  குடும்பத்தினர்கள். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கேழ்வரகு கூலு பிரசாதம் வழங்கினார்கள். ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !