உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு

சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு

மதுரை: மேலூர் வட்டம், தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி,  சங்கர நாராயணர் கோயிலில் கோமதி அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.

மேலும் இன்று கருட பஞ்சமி தினத்தை முன்னிட்டு, கோயிலில் நாக தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெற்றது. கோமதி அம்மன் சர்வ  அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்களுக்கு கொழுக்கட்டை, வெண் பொங்கல் பிரசாதம்  வழங்கப்பட்டது. இன்றைய பூஜை ஏற்பாடுகளை,  திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !