இரவில் படுத்தபடியே சுவாமி நாமங்களை ஜபிக்கலாமா?
ADDED :1665 days ago
தாராளமாக ஜெபிக்கலாம். கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம் என்பது போல நாவிற்கு அணிகலன் இறைநாமம் தான். இஷ்டதெய்வத்தின் நாமாவை இடைவிடாது ஜெபிக்கலாம். நமசிவாய, நாராயண என ஏதாவது ஒரு மந்திரத்தை இடைவிடாது சொல்லுங்கள். நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை அவனிடத்தில் ஒப்படையுங்கள்.