உடனடி பலனுக்கு ‘16’
விநாயகர் சதுர்த்தியன்று 16 நாமாக்கள் கொண்ட இந்த எளிய ஸ்லோகம் சொன்னால் நன்மை உண்டாகும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். இதோ அந்த ஸ்லோகம்.
‘‘ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
துாமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!
பொருள்:
ஸுமுகன் – அழகிய முகம் உடையவர்
ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவர்
கபிலர், கஜகர்ணர் – யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர்
லம்போதரர் – பெருவயிறு உடையவர்
விகடர் – யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்
விக்ன ராஜர் – தடைகளை நீக்குபவர்,
விநாயகர் – தெய்வங்களில் முதல்வர்)
துாமகேது – அழகானவர்
கணாத்யேக்ஷர் – தேவகணங்களுக்கு அதிபதி
பாலசந்திரர் – பிறைநிலா அணிந்தவர்
கஜானனர் – யானை முகம் கொண்டவர்
வக்ரதுண்டர் – வளைந்த துதிக்கை உடையவர்
சூர்ப்பகர்ணர் – அகன்ற காதுகளை உடையவர்
ஹேரம்பர் – ஐந்துமுகம் கொண்டவர்
ஸ்கந்தபூர்வஜர் – கந்தனுக்கு முன் பிறந்தவர்