உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நாளை கும்பாபிஷேக நிறைவு விழா!

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நாளை கும்பாபிஷேக நிறைவு விழா!

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின், மகா கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது. முதல் நாளான நாளை காலை 8.30 மணிக்கு ஹோமம், 10.45 மணிக்கு பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சென்னை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.45 மணிக்கு தஞ்சாவூர் ஜானகி சுப்ரமணியம் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. நாளை மறுநாள் 28ம் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 11.15 மணிக்கு பக்தர்கள் பஜனை, மாலை 4 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவியரின் யோகியே தெய்வம் என்ற தலைப்பில் நாடகம், 5.15 மணிக்கு ஸ்ரீ முரளீதர சுவாமிகள் பகவான் யோகி ராம்சுரத்குமார் உற்சவ மூர்த்திக்கு தங்க கிரீடம் சாற்றுதல் நடக்கிறது. இதையடுத்து பரமாத்வாவுடன் ஆத்மாவின் சந்திப்பு என்ற பகவானின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் வெளியிட, புத்தக ஆசிரியர் ரமாகாந்த் ராய் பெற்றுக் கொள்கிறார். மாலை 6 மணிக்கு பத்ராசல ராமதாஸர் சரித்திரம் பற்றி முரளிதர சுவாமிகளின் உபன்யாசமும், இரவு 8.15 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் ஆசிரம வளாகத்தில் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !