அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1491 days ago
புதுச்சேரி : புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, இங்குள்ள, அத்தி அனந்த ரங்கநாதர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானத்தை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.