கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4931 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வன துர்க்கை அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1008 திருவிளக்கு பூஜையில் வேதாரண்யம், தோப்புத்துறை, ஆறுகாட்டுத்துறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.