மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
சொல்கிறார் வள்ளலார்
* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.
* தினமும் கடவுளை வணங்கு.
* பிறரிடம் உயர்வு, தாழ்வு பார்க்காதே.
* பசித்தவருக்கு உணவு கொடுத்தால் மகிழ்ச்சியாக நீ இருப்பாய்.
* யாரையும் துன்புறுத்தாதே. அதுவே விரதத்திற்கு சமம்.
* யார் கேட்டாலும் உதவி செய்.
* பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படாதே.
* கோபம், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாமே.
* எதற்கும் பயப்படாதே. அதற்காக பயமில்லாமல் இருக்காதே.
* கடவுளை நம்பு. எல்லாம் சரியாகும்.
* மந்திரம் சொன்னால் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்.
* வஞ்சகனின் வார்த்தைக்கு செவி சாய்க்காதே.
* யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதே.
* உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த குருவை வணங்கு.
* உண்மை பேசு. உன் மரியாதை உயரும்.
* நல்லதை உடனே செய்.
* கொடுத்த வாக்கை காப்பாற்று. உலகம் உன்னை மதிக்கும்.
* நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே.
* பிறர் தானம் செய்வதை தடுக்காதே.
* பொதுநலத்துடன் செயல்படு.
* எண்ணம், செயலை ஒன்றாக்கு. வாழ்வு வளம் பெறும்.