அக்.7 குன்றத்து கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED :1477 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவம் அக்.7ல் துவங்குகிறது.
கொரோனா தொற்றால் இந்தாண்டு நவராத்திரி விழா நடத்தப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். கோயில் நிர்வாகம் சிவாச்சார்யார்களுடன் ஆலோசனை நடத்தி கொலு அலங்காரம் செய்வது எனவும், விழாவின் கடைசி நாளன்று தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் பசுமலைக்கு சென்று அம்பு போடும் நிகழ்ச்சியை ரத்து செய்து பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளது. அக்.7 முதல் 14 வரை கம்பத்தடி மண்டபத்தில் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், துர்க்கை அம்மன் அருள்பாலிப்பர் என துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.