உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்ததை நினைத்தபடி அடைய...

நினைத்ததை நினைத்தபடி அடைய...


வழிகாட்டுகிறார் வேதாத்ரி

* மனதில் உறுதியும், செயலில் ஒழுக்கமும் இருந்தால் நீ நினைத்ததை நினைத்தபடி அடையலாம்.       
* இன்பத்தை விட துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் மதிப்பு மிக்கது.
* கவலைப்படாதே.. உனது சக்தி வீணாகும்.  
* நல்லதை செய். அதுவே மனநிறைவை தரும்.          
* இனிமையாகப் பேசு. உலகை வசப்படுத்தலாம்.        
* ஆசையை சீர்படுத்து. வாழ்வு ஆனந்தமாகும்.
* கடமையை சரியாக செய். அப்போதுதான் கடவுள் அருள்புரிவார்.
* உழைப்பால் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது.      
* உண்மையும், நேர்மையும் கொண்டவன் துன்பத்தை கண்டு பயப்படத் தேவையில்லை.
* நீ மகிழ்ச்சியாக இரு. சமுதாயம் மகிழ்ச்சியாக வாழும்.
* தம்பதி இடையே அதிகம் விட்டுக் கொடுப்பவரே அறிவாளி.
* பிறர் செய்யும் குற்றத்தை பெரிதுபடுத்தாதே.
* விட்டுக்கொடுத்து வாழு. அது உன்னை வாழவைக்கும்.
* அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது.
* உறக்கம் மிகவும் அவசியமானது. அதுவே உடலை பாதுகாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !