பனிபோல நாணமதை மறைப்பதேனோ!
ADDED :1550 days ago
நாணம் என்பது மனிதர்களிடம் இருக்க வேண்டிய அவசியமான பண்பாகும். இதனை கைவிட்டவர்கள்தான் இன்று பெரும்பாலும் தவறுகளை பயப்படாமல் செய்கின்றனர். ‘நாம் ஒரு தவறு செய்தால், பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ..’ என யாரும் எண்ணுவதில்லை.
தோழர் ஒருவர், தன் சகோதரன் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற நாயகம், ‘அவரை கண்டிக்காதீர். நாணம் நன்மையானது’ என்றார்.
அப்படி பனிபோல உள்ள நாணத்தை அனைவரது மூடி மறைக்கலாமா...