திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை விழா
ADDED :1549 days ago
நத்தம்: நத்தம் யூனியனில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான திருமலைக்கேணியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.