அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1471 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இரண்டாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தங்கக் கொடிமரம் அருகே அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.