எல்லாம் பெண்ணாலே
ADDED :1471 days ago
பெண்ணால் தான் ஒரு புதிய உயிர் உலகிற்கு வர முடியும் என்பதை குறிக்கும் விதத்தில் ‘ஆவதும் பெண்ணாலே’ என்கிறது பழமொழி. ‘அழிவதும் பெண்ணாலே’ என்பதற்கு குடும்பத்தை சரிவர நிர்வகிக்காமல் அழிப்பவள் என பொருள் கொள்ளக் கூடாது. கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஏற்படும் துன்பங்களை அழிப்பவள் என்பது பொருள். சத்தியவானின் உயிரை எமனிடம் இருந்து மீ்ட்ட தெய்வப் பெண் சாவித்திரியின் வரலாறு இதற்கு உதாரணம்.