உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் தீபவாளியன்று (நவ. 4ல்) 3 விழாக்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபவாளியன்று (நவ. 4ல்) 3 விழாக்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 4 தீபவாளியன்று 3 விழாக்கள் நடக்கிறது.

தீபாவளி பூஜைகள்: காலையில் மூலவர்கள், உற்சவர்கள், கம்பத்தடி, மகா மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம், புத்தாடைகள் அணிவித்து பூஜைகள் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்: சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கும் சஷ்டி காப்பு கட்டப்படுகிறது.அமாவாசை பூஜை: கோயிலில் உச்சிகால பூஜைகள் முடிந்து அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டு தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.சஷ்டி திருவிழாவில் சுவாமிகளுக்கு மட்டுமே காப்பு கட்டப்படும். கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு காப்பு கட்டு இல்லை. சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !