மரியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :1470 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தன.