உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத் பூஜை: ஒரு துளி நீர் கூட அருந்தாமல்... கடும் விரதத்துடன் வழிபாடு

சாத் பூஜை: ஒரு துளி நீர் கூட அருந்தாமல்... கடும் விரதத்துடன் வழிபாடு

 திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்கள், சாத் பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், சாத் பூஜை ஆண்டுதோறும், தீபாவளிக்கு பின், ஆறாவது நாளில் துவங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த வழிபாட்டில், தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருப்பர்.அவ்வகையில், திருப்பூரில் வசிக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சாத் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். போயம்பாளையம், கங்கா நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். கால்வாய் வெட்டி, அதில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் நின்று சூரியனை வழிபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த அஜய்குமார் கூறுகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டியும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய வரங்களை கேட்கவும், இந்த சாத் பூஜையை கொண்டாடுகிறோம். தீபாவளி கடந்து ஆறு நாட்களுக்கு பின், இந்த பண்டிகை துவங்கி கொண்டாடப்படுகிறது.பெண்கள் அதிகாலை புனித நீராடி, விரதம் இருந்து, தண்ணீரில் நின்று சூரியனை வழிபட்டோம். அதன்பின், சூரிய பகவானுக்கு, அர்க்கியம் என்ற படையல் வைத்து, நிறைவு செய்தனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !