உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா: சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா

திருவண்ணாமலை தீப திருவிழா: சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, மூன்றாள் நாள் தீப திருவிழாவில்  வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தார்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, நேற்று மூன்றாம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, 10:00 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில், ஐந்தாம் பிரகாரம் வலம் வந்தனர். இரவு, 10:00 மணிக்கு  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில்  சண்டிகேஸ்வரர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !