உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது

பழநி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது

பழநி: பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது. தண்டாயுதபாணி சுவாமி மூலவர், வள்ளி தெய்வயானை சமேத சண்முகர், சின்னகுமாரசுவாமி துவார பாலகர்கள், மயில்வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. அதன்பின் சண்முக அர்ச்சனை நடைபெற்று, யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. சின்ன குமாரசுவாமி தங்கத் தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி அன்பு, ஹிந்து அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, பழநி மலைக்கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் பாலமுருகன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நவ.18 மாலை பரணி தீபம் ஏற்றுதலும். திருக்கார்த்திகை தினமான நவ.,19 அன்று மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருள்வார். மாலை 5:30 மணிக்கு பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில்களில் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !