அந்தோணியார் கோவில் பெரிய சப்பர பவனி
ADDED :4924 days ago
நாகப்பட்டினம் : நாகை அந்தோணியார் கோவில், ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு நடந்த, பெரிய சப்பர பவனியில், பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை, கடற்கரை சாலையில் உள்ள அந்தோணியார் கோவில், ஆண்டுத் திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கூட்டு பாடல் திருப்பலிக்கு பின் பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட முதன்மை பாதிரியார் செல்வன் செபாஸ்டின் மற்றும் உதவி பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில், புனித லூர்து மாதா மற்றும் அந்தோணியார் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.