உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்தும் கடவுளுக்கே சொந்தம்

அனைத்தும் கடவுளுக்கே சொந்தம்


என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது.
* நீ அனுபவிக்க போவதை கடவுளுக்கு சமர்ப்பித்த பிறகே பயன்படுத்து.
* பிறர் உன்னை துன்பப்படுத்தினால் பொறுத்துக் கொள். இல்லையென்றால் விலகிவிடு.
* உனது மனமே கடவுள் வாழும் இடமாகும்.
* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபடாதே.     
* உடம்புடன் சேர்த்து உள்ளமும் துாய்மையாக இருக்க வேண்டும்.
* கடவுளின் திருவடியை எப்போதும் நினை.    
* காந்தத்தில் ஒட்டும் ஊசி போல ஆழ்ந்த பக்தியில் ஈடுபடு.
* கடவுள் எல்லோரிடமும் கருணையே காட்டுகிறார்.
* ஆழமான பக்தி இருந்தால் பகைவன் மீதும் அன்பு செலுத்தலாம்.
* நல்லதை செய். கடவுள் கைவிட மாட்டார்.
* கஷ்டத்தை எண்ணி கலங்காதே.
* மகிழ்ச்சி என்பது மனதைப் பொறுத்தது.     
* பிறர் செய்யும் தவறை அன்பால் திருத்து.
* உன் தேவைகள் கூடினால் பிரச்னையும் அதிகரிக்கும்.  
* அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதே.
* அளந்து பேசு. பிரச்னை வராது.
* நல்லவர்களுடன் நட்பு கொள். மனம் பலம் பெறும்.
* உன் கோபம் உனக்கு எதிராகவே திரும்பும்.
* ‘நான்’ என்னும் ஆணவத்தை கைவிடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !