உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிப்பாதையில் பயணிக்கலாம் வா!

வெற்றிப்பாதையில் பயணிக்கலாம் வா!


அழைக்கிறார் ஸ்ரீஅன்னை

* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். வெற்றிப்பாதையில் பயணிக்கலாம்.
* பிறருடன் வீணாக சச்சரவில் ஈடுபடாதே.
* மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நல்ல வழியில் செல்.
* கடவுளின் அருளை நீயே உணர மறுக்கிறாய்.
* உனக்கு கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாக கருது.
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.
* எதிலும் ஆர்வமாக ஈடுபடு. முன்னேற்றம் நிச்சயம் வந்தே தீரும்.
* தைரியம் இல்லாதவர்களுக்கு வரும் உணர்வே பொறாமை.
* தற்பெருமை பேசாதே. அதுவே உன் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.
* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதை பற்றி கற்பனை செய்யாதே.
* உனக்கு தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.
* நல்லவர்களுடன் பழகு. அவர்களின் சொற்கள் ஆறுதல் தரும்.
* குறைவாகப் பேசு. அதுவே நல்லது.
* ஆபத்தான சமயத்தில்தான் அமைதி அவசியம்.
* கடவுளின் அன்பை பெற சுயநலம், சுயபரிதாபம் கொள்ளாதே.  
* உண்மையான தேவைகள் நிச்சயம் உன்னைத் தேடி வரும்.
* அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசு.
* தவறான பாதையில் செல்பவர்களுடன் பழகாதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !