உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மஹா தீபம்

திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மஹா தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா திரி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில்  பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று  மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நேற்று  மஹா தீபம் ஏற்ற பயன்படுத்த உள்ள, 1,000 மீட்டர் காடா துணியிலான திரி தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா, சாமந்தி, பூக்களால்  தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று மதியம், 1:00 முதல், வரும், 20 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !